search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி கொலை"

    • கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
    • கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    கடலூர்:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன். பிரபல ரவுடி. இவர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள விவசாய கரும்பு தோட்டத்தில் கும்பலுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை ரவுடி முகிலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    ரவுடியை கொலை செய்த கும்பல் புதுவை மாநிலத்தை கலக்கும் மற்றொரு பிரபல ரவுடியான முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 31), அரியாங்குப்பம் விஸ்வா (23), ரெட்டியார்பாளையம் கணபதி (27), புவனேஸ்வர் (20), உழவர்கரையை சேர்ந்த ஸ்ரீராக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ரவுடி விக்கிக்கும் கொலை செய்யப்பட்ட முகிலனுக்கும் புதுவை மாநிலத்தில் யார் பெரிய ரவுடி என்ற முன்விரோத தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் ரவுடி விக்கி என்ற விக்னேஸ்வரனை, முகிலன் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

    ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியேவந்தார். சிறையில் இருக்கும் போது நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன் புதுவையில் இருந்தால் ரவுடி விக்கி கொலை செய்து விடுவான் என்ற நோக்கத்தில் சிறையில் பழக்கமான கைதி புகழின் பகுதியான சித்தரசூர் பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தரப்பை சேர்ந்தவர்கள் முகிலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன் நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் பகுதியில் பதுங்கியிருப்பது விக்கி தரப்பிற்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து முகிலன் எங்கு செல்கிறான் என்பதை விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் நோட்டமிட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு கும்பலுடன் முகிலன் சித்தரசூர் பகுதியை அடுத்த விவசாய கரும்பு தோட்டத்தில் மது குடித்து கொண்டிங்கும் தகவல் விக்கி தரப்பிற்கு தெரிவந்தது. உடனே விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் வீச்சரிவாளுடன் அங்கு சென்று முகிலனை ஓட ஓடவிரட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    முகிலன் கொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர்.
    • ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடுகு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (வயது 35). இவர் உண்டியலை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் கஜேந்திரன் (21), மூர்த்தி மகன் கணேசன் (26) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர். இதில் கைகளில் கத்தி வெட்டு காயங்களுடன் ராமு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராமு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தில்லைக் காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்த ராமு, ஒரு ஓட்டலில் அமர்ந்து டிபன் சாப்பிட்டார். இதனை அறிந்து வந்த கஜேந்திரன், கணேசன் ஆகியோர் ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். இதில் நிலை குலைந்த ராமு, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீசார் விரைந்து சென்றனர். கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராமுவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது,

    • வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கல்லறை அப்பு நேற்று முன்தினம் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் விஜி என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி அப்புவை வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து விஜி மற்றும் அலெக்ஸ், ராஜேஸ், சுரேஷ், செல்வம், ராஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி அப்பு, மகேஷ் என்பவரிடம் தனது ஆட்டோவை வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த வாடகை பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு மெக்கானிக் விஜி கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட தகராறில்தான் அப்பு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அப்பு, விஜியை கொன்று விடுவதாக மிரட்டியதால் விஜி முந்திக்கொண்டு அப்புவை போனில் அழைத்து நேரில் வரவழைத்து கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி. நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கொலையில் தேடப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் உள்பட 7 பேர் இன்று காலை திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.

    • போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    வேப்பம்பட்டு:

    திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற ஜெபராஜ் (வயது30). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஜெபராஜ் இன்று காலை வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்னை மார்க்கத்தில் உள்ள தண்டவாளம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து ஜெபராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது ஒரு கால் மற்றும் தலையில் மட்டும் பலத்த காயம் உள்ளது. எனவே மர்மநபர்கள் அவரை கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவருடன் மோதலில் உள்ளவர்கள் யார்? யார்? கடைசியாக யாருடன் சென்றார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி.

    நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

    அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

    லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.

    எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    • 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர்.
    • காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் அவ்வை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவரது நண்பர் பிரபாகரன் (25).

    ரவுடிகளான இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரவியிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், ரவியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்த ரவியின் உறவினர்கள் மற்றும் அவரது 3 மகன்களும் சேர்ந்து யோகேஸ்வரன் மற்றும் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். செங்கலால் தாக்கப்பட்ட யோகேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    தொடர்ந்து ரவியின் உறவினர்கள், அவரை தாக்கியதால் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரவியின் உறவினர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    இறந்தவரின் உறவினர்கள் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். யோகேஸ்வரன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யோகேஸ்வரனை தாக்கியதாக ரவியின் மகன்கள் 3 பேர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த புத்தாண்டு அன்று அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரபாகரன் தான் ஜெயிலுக்கு செல்ல ரவி தான் காரணம் என நினைத்து அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரவியை பழிவாங்க வேண்டும் என்று கருதிய பிரபாகரன், நேற்று நண்பர் யோகேஸ்வரனுடன் அரிசிபாளையம் வந்த நிலையில் அங்கு ரவியின் உறவினர்கள் தாக்கியதில் யோகேஸ்வரன் இறந்ததும் பிரபாகரன் காயம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ராயபுரம்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கிற பம்ப் அஜய் (வயது 23). ரவுடி. இவர் மீது 3 கொலை, கொள்ளை, மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன.

    நேற்று நள்ளிரவு அவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் அஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவுடி அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக ரவுடி அஜய்யுடன் மதுகுடித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது பை ஒன்றை கொண்டு வந்து இருந்தார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் மறைத்து வைத்து விளையாடி உள்ளனர். அங்கிருந்து அஜய் புறப்பட தயாரானபோது பை காணமால் போய் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் நண்பர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளாளல் அஜய்யை வெட்டி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை வெட்டி கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×